இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சைக்கரிய விடயமாக மாறியுள்ள கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்ட மூலம் தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நாளைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்ற நீதியரசர் குழாமினால் எடுக்கப்பட்ட தீர்மானம் இதுவரையில் பாராளுமன்றத்துக்கு கிடைக்கப் பெறாமையினால் விவாதம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.